/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கல்
ADDED : அக் 19, 2025 11:57 PM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தீபாவளி பண்டிகையையொட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996- 2002ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சிலர் நண்பர்கள் குழு துவங்கி, ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சிக்கு, நண்பர்கள் குழு பரந்தாமன் தலைமை தாங்கினார். சுமன், பாஸ்கர் முன்னிலை வகித்தனர். மளிகைப் பொருட்களை ரகுராமன், மலர்மணி வழங்கினர்.
நிகழ்ச்சியில், கார்த்திக், பரசுராமன், சத்தியமூர்த்தி, சிவ சண்முகம், லட்சுமி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.