/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 12, 2024 04:07 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில், அமைச்சர் ரூ.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஏ.டி.ஐ.பி., திட்டத்தின் கீழ், மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நகராட்சி துணை சேர்மன் ராணி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நல்லுார் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம் வரவேற்றார்.
அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு, விருத்தாசலம், நல்லுார் வட்டாரங்களை சேர்ந்த 649 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.67 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.
தாசில்தார் அந்தோணிராஜ், நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், காங்., நகர தலைவர் ரஞ்சித், அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

