/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு சீருடை வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு சீருடை வழங்கல்
ADDED : அக் 19, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் கலந்துகொண்டு, துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்.
இதில், துப்புரவு அலுவலர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், நகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.