ADDED : ஜூன் 07, 2025 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மின்சாரம் தாக்கி காயமடைந்தவர்களுக்கு, டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆறுதல் கூறினார்.
ரெட்டிச்சாவடி அடுத்த சின்னஇருசாம்பாளையத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் சுவாமி தேரில் வீதியுலா நடந்தது.
தேரின் கலசம், தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதில் ஒருவர் இறந்தார்.
காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., சார்பில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
சதாசிவம், ஜீவா, வசந்தராஜ், சண்முகராஜ், புருஷோத்தமன், குணசேகர், வீரப்பன், பெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் மருது உடனிருந்தனர்.