/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : அக் 29, 2024 06:49 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாராந்திர குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இதில், முதியோர்
உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் துாய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலம் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் 4 பேருக்கு 19,750 ரூபாய் மதிப்பிலான திருமண உதவித்தொகை, பட்டப்படிப்பு உதவித்தொகை மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கான உதவித்தொகை கலெக்டர் வழங்கினார்.
அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் லோகநாதன், கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், முத்திரைத்தாள் துணை கலெக்டர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டதால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.