sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா

/

நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா

நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா

நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா


ADDED : நவ 09, 2024 06:04 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி, நகராட்சி அலுவலகம் முன் பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் திருவள்ளுவர் 4 வது குறுக்கு தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், கழிவுநீர் கால்வாய் இல்லாததால், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதனால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதியடைகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர்.

இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us