sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாதாள சாக்கடை திட்டம் பொது மக்கள் எதிர்பார்ப்பு

/

பாதாள சாக்கடை திட்டம் பொது மக்கள் எதிர்பார்ப்பு

பாதாள சாக்கடை திட்டம் பொது மக்கள் எதிர்பார்ப்பு

பாதாள சாக்கடை திட்டம் பொது மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 05, 2025 03:22 AM

Google News

ADDED : செப் 05, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவு சாதாரண மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சியின் எல்லைகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பேரூராட்சி வார்டுகளில் உள்ள வடிகால் வசதிகள் போதுமானதாக இல்லை.

மழை காலங்களில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, சாலைகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை.

பல வார்டுகளில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை காலங்களில் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடும் அவலம் தொடர்கிறது. எனவே, பெண்ணாடம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை ஏற்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us