/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பணி கிடப்பில் பொதுமக்கள் அவதி
/
சாலை பணி கிடப்பில் பொதுமக்கள் அவதி
ADDED : செப் 28, 2024 06:31 AM

பெண்ணாடம், : கிடப்பில் போடப்பட்ட சுமைதாங்கி - வெண்கரும்பூர் தார்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம், சுமைதாங்கி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார் வழியாக வெண்கரும்பூர் செல்லும் தார்சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இப்பகுதி கிராம மக்களும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை பராமரிப்பின்றி ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. 3 மாதங்களுக்கு முன் தார்சாலை அமைக்க ஜல்லி கொட்டி நிரப்பப்பட்டது.
ஆனால், இதுவரை பணியை துவங்காததால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். இரு சக்கர வாகனங்கள் பஞ்சராவதுடன், சிறு ஜல்லிகளால் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, தார்சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.