sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் கடும் அவதி  

/

பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் கடும் அவதி  

பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் கடும் அவதி  

பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் கடும் அவதி  


ADDED : ஜூன் 10, 2025 07:38 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலைய பயணியர் நிழற்குடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் பேரூராட்சி முக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சிமென்ட் மற்றும் சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் அன்றாட தேவைக்கும், விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி, சென்னை உட்பட பல பகுதிகளுக்கு செல்லவும் பெண்ணாடம் பஸ் நிலையம் தான் வரவேண்டும்.

இதனால் பஸ் நிலைய வளாகம் எந்நேரமும் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படும். பயணிகள் நலன்கருதி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

நாளடைவில், பயணியர் நிழற்குடையில் இருந்த இருக்கைகளை, சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியதுடன், பெயர்த்தும் எடுத்து சென்றனர். தற்போது, தள்ளுவண்டி, பூ, பழக்கடைகள் நிழற்குடையை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நிழற்குடை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமரமுடியமால் நின்றபடி நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற பெண்ணாடம் போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us