ADDED : மார் 18, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, : புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமிகள் 429வது அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ராகவேந்திரர் சுவாமிகள் அவதார இல்லத்தில் நடந்த விழாவில், அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாத தோத்திர பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை 6:00 மணிக்கு அபிஷேகம், 9:30 மணிக்கு பால் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பகல் 12:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
ரமேஷ் தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர்.

