sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ரயில்வே மேம்பாலம் விவசாயிகள் மனு

/

 ரயில்வே மேம்பாலம் விவசாயிகள் மனு

 ரயில்வே மேம்பாலம் விவசாயிகள் மனு

 ரயில்வே மேம்பாலம் விவசாயிகள் மனு


ADDED : டிச 30, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வரக்கால்பட்டு விவசாயிகள், மேம்பாலம் அமைக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:

கடலுார் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் ரயில்வே கிராசிங் 154 உள்ளது.

இதன் அருகில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் மகசூல் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள், டிராக்டர், அறுவடை இயந்திரம் செல்வதற்கான வழியாக உள்ளது.

தற்போது இந்த லெவல் கிராசிங்கை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனால் விளை நிலங்களுக்கு செல்லும் வழி தடைபட்டு இடுபொருட்கள், விளை பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே லெவல் கிராசிங் 154ல் தற்போது உள்ள நிலை தொடரவோ அல்லது மேம்பாலம் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us