/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு
/
விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு
விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு
விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 30, 2025 05:23 AM

கடலுார்: தமிழ்நாடு போக்குவரத்து கழக, கடலுார் மண்டலம் சார்பில் விபத்தில்லாமல் பஸ் இயக்கிய 21 ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கடலுார் மண்டலம் சார்பில் பாதுகாப்பான பஸ் இயக்கம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் கடலுார் பணிமனையில் நடந்தது.
மோட்டார் வாகன தீர்ப்பாய பிரிவு உதவி மேலாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ஜெனித்தா, விபத்தில்லாமல் பஸ் இயக்கிய 21 ஓட்டுனர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவை உதவி மேலாளர் (வணிகம்) அசோக்குமார் தொகுத்து வழங்கினார்.
மண்டல பொதுமேலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

