sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சப்வேயில் மழைநீர் தேக்கம் கிராம மக்கள் பாதிப்பு

/

சப்வேயில் மழைநீர் தேக்கம் கிராம மக்கள் பாதிப்பு

சப்வேயில் மழைநீர் தேக்கம் கிராம மக்கள் பாதிப்பு

சப்வேயில் மழைநீர் தேக்கம் கிராம மக்கள் பாதிப்பு


ADDED : ஜன 09, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை,; பரங்கிப்பேட்டை அருகே, நான்கு வழிச்சாலை சப்வேயில் மழைநீர் தேங்கி நிற்பதால், இரு கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்- நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலையில், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் இருந்து தீர்த்தாம்பாளையம் கிராமத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்றுவர வசதியாக சப்வே அமைக்கப்பட்டது.

கடந்த மாதம் பெய்த கன மழையின்போது தண்ணீர் சப்வேயில் தேங்கியுள்ளது. இதனால், தீர்த்தாம்பாளையம் மற்றும் பு.முட்லுார் கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வந்துச்செல்ல கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சப்வேயில், தேங்கியுள்ள மோட்டார் மூலம் அகற்ற நகாய் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களின் பாதிப்பு தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us