sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

/

அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விருத்தாசலம் அருகே பரபரப்பு


ADDED : அக் 09, 2025 11:32 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நத்தம் புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த சின்னப்பரூர் ஆதிதிராவிடர் வசிப்பிடத்தில், நத்தம் புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து கழிவறை கட்டி பயன்படுத்தி வருவதாக அப்பகுதியை சேர்ந்த ரோஜா அமிர்தம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், விருத்தாசலம் மண்டல துணை தாசில்தார் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் அருந்ததி, வி.ஏ.ஓ., சத்யராஜ் ஆகியோர் மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.

அப்போது, கழிவறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த தனிநபர், முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இடிக்க கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டடம் மற்றும் அங்கு உளுந்து சாகுபடி செய்திருந்த வயல், மரங்கள், கொட்டகை என அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us