/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்சி கொடி கம்பங்கள் கடலுாரில் அகற்றம்
/
கட்சி கொடி கம்பங்கள் கடலுாரில் அகற்றம்
ADDED : மார் 19, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், கடலுாரில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது.
தமிழகத்தில் லோக் சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நாளை 20ம் தேதி துவங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இதையடுத்து, கடலுார் மாவட்டம் முழுவதும் தேர்தல் துறை சார்பில், அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
கடலுாரில், பாரதி சாலையில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.

