sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை

/

புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை

புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை

புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை


ADDED : மே 22, 2025 11:33 PM

Google News

ADDED : மே 22, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மந்தாரக்குப்பம்-நெய்வேலி டவுன்ஷிப் சாலை, வடக்குவெள்ளுர் ஊராட்சிக்குட்பட்ட , வேப்பங்குறிச்சி சாலை அருகே மந்தாரக்குப்பம் புதிய பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நான்குமுனை சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து அதிகரித்து, இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.

இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் வரிசையில் வாகனங்கள் அணிவகித்து நிற்க வேண்டியுள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரண்டாம் சுரங்கத்திற்கு செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us