/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் கடைகள் இடம் மாற்ற கோரிக்கை
/
டாஸ்மாக் கடைகள் இடம் மாற்ற கோரிக்கை
ADDED : டிச 29, 2024 05:57 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் அடுத்தடுத்துள்ள 4 டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., முதல் பாலக்கரை வரையும், மேம்பால மறுமுனையில் தென்கோட்டை வீதியில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நகரின் பிரதான நெடுஞ்சாலையில் சிதம்பரம் பிரிவு ரோடு, பாலக்கரை, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம் பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளால் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுவருகிறது. .
பகல் 12:00 முதல், இரவு 10:00 மணி வரை மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்லும் போதை ஆசாமிகளால் பொது மக்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
அதுபோல், மாணவிகள், பெண்கள் நடந்து செல்லும்போது கிண்டல் செய்வது வாடிக்கையாகிவிட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் நகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான விடுதிகளும் மூடப்பட்டன.
அப்போது, குப்பநத்தம் புதிய புறவழிச்சாலையோர டாஸ்மாக் கடை மட்டும் இயங்கியது.
இதனால் நகரில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏதுமின்றி காணப்பட்டது.
ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்து, டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்ததால், பொது மக்கள் தினசரி பிரச்னையை சந்திக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே, விருத்தாசலம் நகரில் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

