sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை


ADDED : மே 07, 2025 01:26 AM

Google News

ADDED : மே 07, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், என 200க்கும் மேற்பட்டோர் தினசரி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், ஊட்டச்சத்து மாத்திரை மருந்துகள் வழங்கப்படுகிறது. இங்கு, மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், மருந்தாளுனர் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

சேத்தியாத்தோப்பை சுற்றி பெரிய அளவில் அரசு மருத்துவமனைகள் இல்லாததால் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று சிகிக்சை பெற பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சேத்தியாத்தோப்பு அருகே புதிய விக்கிரவாண்டி-தஞ்சாவூர் பைபாஸ் சாலை விபத்துக்கள் ஏற்பட்டால் கூட அருகில் மருத்துவமனை இல்லாததால் 25 கி.மீ., துாரம் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதனால், கூடுதல் செலவு, நேரம் விரயமாகிறது.

எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பெற முடியும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us