/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
/
சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : டிச 24, 2024 07:49 AM
மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடக்குவெள்ளுர், கீழ்பாதி, மேல்பாதி, பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தினசரி 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும், கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற் கொண்டு வருகின்றனர்.
கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் குழந்தைகள் உடல் நலன் பாதிப்பு, விபத்து, மாரடைப்பு, உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு அருகில் உள்ள விருத்தாசலம், கடலுார் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் காலவிரயம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமம்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.