/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிடிப்பட்ட மெகா சைஸ் நண்டுவாக்களி மீட்பு
/
பிடிப்பட்ட மெகா சைஸ் நண்டுவாக்களி மீட்பு
ADDED : ஜூன் 26, 2025 06:44 AM

சிதம்பரம் : சிதம்பரம் அருகே வயல்வெளியில் கிடைத்த நண்டுவாக்களியை வனத்துறையினர் மீட்டு பிச்சாவரம் காப்பு காட்டில் விட்டனர்
சிதம்பரம் அடுத்துள்ள உரத்துறை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இயற்கை வாழ்வியல் ஆலோசகரான, இவரது வீட்டில் அருகே உள்ள அவருக்கு சொந்தமான வயல்வெளியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நேற்று வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது :கடும் விஷம் கொண்ட, ஜந்துவான 3 பெரிய அளவிலான நண்டுவாக்களி தென்பட்டது.
இயற்கை வாழ்வியல் ஆலோசகராக உள்ள சுந்தரபாண்டியன், விஷால் ஜந்துவை கொல்லாமல் உடனடியாக சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வணவர் அன்பரசன் நேரில் சென்று பிடித்து வைக்கப்பட்டிருந்த நண்டுவாக்களியை, மீட்டுக் கொண்டு வந்து சிதம்பரம் அடுத்துள்ள பிச்சாவரம் காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.