ADDED : அக் 16, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர், அரசு பஸ் மோதி இறந்தார்.
திட்டக்குடி அடுத்த கொட்டாரம் பழைய காலனியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 76. இவர் நேற்று காலை 5:00 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் கொடிகளம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, கடலுாரில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.