/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்கவரப்பட்டில் நிவாரணம் கேட்டு சாலை மறியல்
/
மேல்கவரப்பட்டில் நிவாரணம் கேட்டு சாலை மறியல்
ADDED : டிச 13, 2024 06:33 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு ஊராட்சியில் மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு ஊராட்சியில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நிவாரண தொகை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை பண்ருட்டி-கடலுார் சாலையில் காலை 10:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதன் பேரில் 10:30 மணிக்கு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், இச்சாலை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.