ADDED : மார் 01, 2024 10:42 PM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி நுகர்வோர் அமைப்பு மற்றும் அனைத்து ஒட்டுநர் பயிற்சிப் பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மந்தாரக்குப்பத்தில் நடந்தது.
நுகர்வோர் அமைப்பு துணைத் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஒட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் துரைராஜ், ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ெஹல்டம் அணிந்து செல்ல வேண்டும். காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி வாகனங்களை இயக்கக் கூடாது, சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என, சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் பொதுமக்களுக்கு வழங்கினார்.
ெஹல்மட் அணியாமால் சென்றவர்களுக்கு அறிவுரை வழங்கி, ெஹல்மட் வழங்கினார். ெஹல்மட் அணிந்து சென்றவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சேகர், சண்முகம், நெய்வேலி தொழில் வர்த்தக சங்க தலைவர் பன்னீர்செல்வம், அரிமா மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். நுகர்வோர் அமைப்பு பேரவை செயலாளர் உன்னிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

