ADDED : ஆக 07, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் தலைமை தாங்கி பேசுகையில், 'போக்குவரத்து விதிகளை மீறி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யக் கூடாது. மீறி பயணம் செய்தால் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நேரிடும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் மாணவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மாணவர்கள் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர் முரளி, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.