ADDED : ஆக 22, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் தேவா (எ) வந்திய தேவன்.
இவர் மீது மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. கொலை மிரட் டல், சாராய வழக்கு என 11 வழக்குகள் உள்ளன.
இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள தேவாவிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை நேற்று போலீசார் வழங்கி கைது செய்தனர்.