ADDED : மார் 20, 2026 07:42 AM

சேத்தியாத்தோப்பு: புவனகிரியில், ரூ.7.71 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேத்தியாத்தோப்பு, குறுக்குரோட்டில் புவனகிரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் போலீசார் மஞ்சுளா, சாந்தி ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை 2:20 மணியளவில் விருத்தாசலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அதில், ஆவணமின்றி, இந்திய மற்றும் இலங்கை பணம் மொத்தம், ரூ.7.71 லட்சம் இருந்ததை கண்டறிந்து உடனடியாக பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இலங்கையிலிருந்து வந்த நடராஜராமநாதன்சிவக்குமார், ரத்தினம்ஸ்ரீகாந்த் ஆகியோர், அந்த பணத்தை, கோவிலுக்கு சிலை வாங்க கொண்டு வந்தததாக, தெரிவித்தனர்.
உரிய ஆவணம் அளித்து, பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பணம், புவனகிரி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
