sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

6 யூனிட் கூழாங்கற்கள் பறிமுதல்; விருதை அருகே ஆர்.டி.ஓ., அதிரடி

/

6 யூனிட் கூழாங்கற்கள் பறிமுதல்; விருதை அருகே ஆர்.டி.ஓ., அதிரடி

6 யூனிட் கூழாங்கற்கள் பறிமுதல்; விருதை அருகே ஆர்.டி.ஓ., அதிரடி

6 யூனிட் கூழாங்கற்கள் பறிமுதல்; விருதை அருகே ஆர்.டி.ஓ., அதிரடி


ADDED : பிப் 01, 2025 12:33 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் அருகே சட்ட விரோதமாக கடத்த முன்ற 6 யூனிட் கூழாங்கற்களை ஆர்.டி.ஓ., தலைமையிலான வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கோட்டேரி ஓடை புறம்போக்கு நிலம் மற்றும் தனிநபருக்கு சொந்தமான நிலங்களில் இருந்து விதிகளை மீறி கூழாங்கற்கள் பிரித்து எடுப்பது சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை சுட்டிக்காடி தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வௌியானது.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று காலை கோட்டேரியில் திடீர் ஆய்வு செய்தனர்.

அதில், கோவிந்தசாமி மகன் ஆறுமுகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து பாலக்கொல்லை, புதுப்பேட்டையை சேர்ந்த வைத்தியநாதன் மகன் வெங்கடேசன் அனுமதியின்றி கூழாங்கற்களை பிரித்து எடுப்பது உறுதி செய்து, அங்கு குவித்து வைத்திருந்த 6 யூனிட் கூழாங்கற்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், நிலத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும், சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளையடிக்க முயன்றவர் மீது ஊமங்கலம் போலீசார் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us