ADDED : மே 04, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன்கோவில் கிராமத்தில் உள்ள சடாமுனி கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன்கோவில் கிராமத்தில் உள்ள சடாமுனி, விருப்பநாத ஐய்ய னார் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 1ம் தேதி வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, யாகசாலை பிரவேசம் நடந்து இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது. 8:30 மணிக்கு தீபாராதனை நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து கும்பாபிேஷகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.