நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பைக்கில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று காவனுார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காவனுார் பகுதியில் உள்ள வெள்ளாற்றில், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அறிவழகன், 38;என்பவர் பைக்கில் ஆற்றுமணல் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அறிவழகனை கைது செய்தனர்.
மேலும், அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.