ADDED : ஜன 26, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேர்க்காம்பாளையத்தில் மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்த குறவன்பாளையத்தை சேர்ந்த முருகன்,45;என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் வானமாதேவி பாலம் அருகே மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்தார்.
போலீசாரை கண்டதும் தப்பியோடினார். நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

