ADDED : செப் 25, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி சவுடு மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி சம்மந்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 60; இவருடைய, விவசாய நிலத்தில், அரசு அனுமதியின்றி சவுடு மணலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் சின்னகுமட்டி வடக்குத் தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் கடத்திச் சென்றுள்ளனர்.
பெரியகுமட்டி வி.ஏ.ஓ., சிவமுருகன் புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, மணிகண்டனை, 35; கைது செய்தார். கிருஷ்ணமூர்த்தியை தேடிவருகிறார்.