/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சங்காபிேஷகம்
/
திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சங்காபிேஷகம்
ADDED : பிப் 04, 2024 03:41 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி, 1008 சங்காபிேஷகம் நடந்தது.
கோவிலில், ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு, தேய்பிறை அஷ்டமி தினத்தில், சிறப்பு பூனைஜகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று, 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகம் நடந்தது. தீபாராதனையை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று, நெல்லிக்குப்பம் கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.