
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத 5வது சோமவாரத்தையொட்டி நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், காயத்ரி ேஹாமம், ருத்ர ேஹாமம் நடந்தது.
தொடர்ந்து, கடம் புறப்பாடாகி, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. வலம்புரி அற்புத விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

