sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மூதாட்டியின் செயின் பறிப்பு: சங்கராபுரம் வாலிபர் கைது

/

 மூதாட்டியின் செயின் பறிப்பு: சங்கராபுரம் வாலிபர் கைது

 மூதாட்டியின் செயின் பறிப்பு: சங்கராபுரம் வாலிபர் கைது

 மூதாட்டியின் செயின் பறிப்பு: சங்கராபுரம் வாலிபர் கைது


ADDED : நவ 18, 2025 06:48 AM

Google News

ADDED : நவ 18, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மூதாட்டியிடம் வழி கேட்பதுபோல செயினை பறித்து, காதுகளை அறுத்து கம்மல் திருடிச் சென்ற இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிராவ் மனைவி கவிதா, 50; கடந்த 5ம் தேதி பகல் 1:00 மணியளவில், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், கோவிலுக்கு செல்ல வழி கேட்டனர்.

கவிதா வழி கூறியபோது, அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலிசெயினை பறித்த மர்ம நபர்கள், காதுகளில் இருந்து 1 சவரன் கம்மலை பறித்து தப்பிச் சென்றனர்.

இதில், கவிதாவின் காதுகள் அறுந்து பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் கவிதா சிகிச்சை பெற்றார்.

இது குறித்த அவரது புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, தொட்டிகுப்பம், ராசாபாளையம் வழியாக உள்ள சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில், செயின் பறிப்பில் ஈடுபட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மையனுார், காட்டுக்கொட்டாய் எலியாஸ் மகன் அந்தோணி ஆரோக்யராஜ், 24, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us