/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்
/
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்
ADDED : ஏப் 13, 2025 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாள், தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு உற்சவர் தாயார், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் திருக்கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

