/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்வ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
சர்வ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : டிச 06, 2024 06:35 AM

கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கடலுார், கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி., நகர் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜையை தொடர்ந்து விநாயகர், ஆதிவிநாயகர், தட்சணாமூர்த்தி, பாலமுருகர், துர்கை சிலைகள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.
நேற்று காலை விசேஷ சந்தி, கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மகா பூர்ணாஹூதி மற்றும் யாத்ராதானம் நடந்தது.
கடம் புறப்பாடாகி விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு சுவாமி வீதியுலா நடந்தது.