/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோ.சத்திரம் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
/
கோ.சத்திரம் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 20, 2025 06:27 AM
குள்ளஞ்சாவடி : கோ.சத்திரம் அரசுப்பள்ளி 10ம் வகுப்புத் பொது தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 103 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 102 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதன் மூலம் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது. கணிதத்தில் ஒருவர், அறிவியலில் 3 பேர், சமூக அறிவியலில் 4 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
பள்ளி அளவில் சாரதி 487 மதிப்பெண் பெற்று முதலிடம், தர்ஷினி 484 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், சவுமியா 480 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 450க்கு மேல் 11 பேரும், 400க்கு மேல் 47 பேரும் மதிப்பெண் பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியை அடைக்கலம் மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.