sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மாவட்ட செஸ் போட்டி பள்ளி மாணவர்கள் உற்சாகம்

/

 மாவட்ட செஸ் போட்டி பள்ளி மாணவர்கள் உற்சாகம்

 மாவட்ட செஸ் போட்டி பள்ளி மாணவர்கள் உற்சாகம்

 மாவட்ட செஸ் போட்டி பள்ளி மாணவர்கள் உற்சாகம்


ADDED : நவ 27, 2025 04:49 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் நடந்த மாவட்ட செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் உற்சாகமாக பங் கேற்றனர்.

திருப்பாதிரிப்புலியூர், புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான, செஸ் விளையாட்டு போட்டியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வியோடு தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் கற்றல் கொண்டாட் டம் எனும் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பரதம் மற்றும் கிராமிய நடனப் பயிற்சி, மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பயிற்சி, ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி, கலை மற்றும் ஓவியம் பயிற்சி, செஸ் விளையாட்டு பயிற்சி, பாடல் மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் ஆகிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த, ஆகஸ்ட் மாதம் முதல் நடத்தப்பட் டன.

செஸ் விளையாட்டு பயிற்சி, மாவட்டம் முழுவதும், 14 ஊராட்சி ஒன்றியங்களில், 672 மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு 225 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், 9 வயதிற்குட்பட்ட 64 மாணவ, மாணவிகளுக்கும், 11 வயதிற்குட்பட்ட 60 மாணவ,மாணவிகளுக்கும், 13 வயதிற்குட்பட்ட 67 மாணவ,மாணவிகளுக்கும், 17 வயதிற்குட்பட்ட 42 மாணவ,மாணவிகளுக்கும் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், பள்ளி தாளாளர் நசியன் கிரிகோரி, கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us