/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் சதமடித்த வெயில்
/
கடலுார் மாவட்டத்தில் சதமடித்த வெயில்
ADDED : மே 13, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 100 டிகிரிக் மேல் வீசிய வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை சராசரியை விட குறைவாக இருந்தது. அதனால் கோடைகாலம் துவங்கும் முன்னரே 100 டிகிரி பாரான்கீட் அளவில் கடும் வெயில் தாக்கம் காணப்பட்டது. அக்னி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. நாளுக்கு நாள் வெயில் தாக்கத்தில் மக்கள் அவதியடைகின்றனர். மாவட்டத்தில் கடலுார் 102.2, பண்ருட்டி 105, விருத்தாசலம் திட்டக்குடி பகுதியில் 104, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 101 டிகிரி வெப்பம் காணப்பட்டது. கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.