ADDED : ஜன 04, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளையில் குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், மெயின்ரோடு பகுதி பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முகமது யாசின், 50; என்பவரது பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்து, கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதைதொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரி நல்லதம்பி, தலைமையிலான குழுவினர் முகமது யாசின் பெட்டிக்கடைக்கு, சீல் வைத்தனர்.