sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் மாயமான சிறுவன் 2வது நாளாக தேடும் பணி

/

ஆற்றில் மாயமான சிறுவன் 2வது நாளாக தேடும் பணி

ஆற்றில் மாயமான சிறுவன் 2வது நாளாக தேடும் பணி

ஆற்றில் மாயமான சிறுவன் 2வது நாளாக தேடும் பணி


ADDED : டிச 24, 2024 07:57 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; வெள்ளாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி இரண்டாவது நாளாகியும் பயனில்லாததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

பெண்ணாடம் அடுத்த மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர் கடந்த 22ம் தேதி, தனது மகன் சந்திரசேகர், 10, (5ம் வகுப்பு) என்பவருடன், அவ்வழியே செல்லும் வெள்ளாற்றில் குளிக்க சென்றார்.

அப்போது, திடீரென சந்திரசேகர் நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை மீட்க முடியாமல் சரஸ்வதி கூச்சலிட்டும் பலனில்லை. தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் நீரில் மூழ்கிய சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக தீயணைப்பு மீட்பு படையினர் 15 பேர், மாவட்ட காவல் மீட்பு படையினர் 10 பேர் மற்றும் கிராமத்தினர் 25 பேருடன் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இரவு 7:00 மணி வரை சிறுவன் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. நீரோட்டம் குறையாத காரணத்தால் சிறுவனை மீட்கும் பணி தொய்வடைந்துள்ளது. ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்க முடியாததால் மோசட்டை கிராமமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.






      Dinamalar
      Follow us