sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கழிவுநீர் அகற்றும் லாரி காட்சி பொருளான அவலம்

/

கழிவுநீர் அகற்றும் லாரி காட்சி பொருளான அவலம்

கழிவுநீர் அகற்றும் லாரி காட்சி பொருளான அவலம்

கழிவுநீர் அகற்றும் லாரி காட்சி பொருளான அவலம்


ADDED : ஜூன் 25, 2025 08:16 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் லாரி இல்லாததால் தனியார் மூலமாக மக்கள் தங்களது வீட்டின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்து வருகின்றனர்.

இதற்கு 7 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சியில் பயன்படாமல் இருந்த குப்பை அகற்றும் லாரியை டேங்கர் லாரியாக மாற்றி கழிவுநீர் அகற்றும் வாகனமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

துாய்மை இந்தியா திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் பழைய லாரி கழிவுநீர் அகற்றும் லாரியாக புதுப்பிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களாகியும் இந்த லாரி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது.

எனவே, லாரியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us