/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED : அக் 19, 2025 11:59 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், நுாற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட பொருட்களால் அபி ேஷகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து பகல் 2:30 மணியளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 4:00 மணியளவில் அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர் .
அதேபோல், மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.