தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆடுகள் திருட்டு: இருவர் கைது

ஆடுகள் திருட்டு: இருவர் கைது

ஆடுகள் திருட்டு: இருவர் கைது


ADDED : மார் 25, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர் : வேப்பூர் அருகே 2 ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர் கூட்டுரோட்டில் போலீசார் நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டி.வி.எஸ்., எக்செல் மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளுடன் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, ஒருவர் தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார் மற்ற இரண்டு பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர்கள், சின்னசேலத்தை சேர்ந்த பாலமுருகன், 39; வெங்கடேசன், 42; ஜெயராமன் என்பதும், மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு வேப்பூர் அடுத்த ஏ.கொளப்பாக்கம் கிராமத்தில் இருந்து 2 ஆடுகளை திருடிக்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பாலமுருகன், வெங்கடேசனை கைது செய்தனர். தப்பியோடிய ஜெயராமனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us