/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடைகளில் பேரூராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு
/
கடைகளில் பேரூராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு
ADDED : செப் 29, 2024 06:46 AM

பெண்ணாடம், : பெண்ணாடத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பது குறித்து கடைகளில் பேரூராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட மளிகை, டீ கடை, பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது.
அதைத்தொடர்ந்து, பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன், பேரூராட்சி முதல்நிலை எழுத்தர் ரமேஷ், வரிதண்டலர் இளையராஜா ஆகியோர் மளிகை, டீ கடை, பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்து, கடை உரிமையாளர்களுக்கு புகையிலை, போதைப்பொருள் விற்கக்கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.