sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உழவு மாடு தட்டுப்பாடு எதிரொலி; இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி

/

உழவு மாடு தட்டுப்பாடு எதிரொலி; இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி

உழவு மாடு தட்டுப்பாடு எதிரொலி; இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி

உழவு மாடு தட்டுப்பாடு எதிரொலி; இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி


ADDED : ஜூலை 01, 2025 07:01 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் பகுதியில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த எருமனுார், மணலுார், எ.வடக்குப்பம், சின்னவடவாடி, பெரியவடவாடி, தொட்டிக்குப்பம், கோ.பவழங்குடி உள்ளிட்ட பல்வேறு 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடி பட்டத்தில் போர்வெல், கிணறு பாசனம் மற்றும் மானாவாரியாக வேர்க்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.

அதேபோல், நடப்பாண்டு விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, விருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில் தற்போது, உழவு மாடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, எ.வடக்குப்பம் விவசாயி செல்வக்குமார் கூறுகையில், உழவு மாடுகள் மூலம் வேர்க்கடலை விதைப்பு செய்ய, மாடு தட்டுப்பாடு உள்ளது. இதனால், ஏர் மாடுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. உழவுப் பணிகளை மேற்கொள்ள 3 பேர், விதை பருப்பு போட 9 பேர் என, ஒரு ஏக்கருக்கு, 12 பணியாட்கள் தேவை. இயந்திரத்தை பயன்படுத்தி விதைப்பதால், ஒரே ஒரு பணியாளர் போதுமானதாக உள்ளது.

இயந்திரத்தில் விதைத்தால், சீரான இடைவெளியில் வேர்க்கடலை பயிர் வளரும். அதனால், போதிய வெளிச்சம் கிடைத்து பயிர்கள் நன்கு வளரும். களை எடுக்கும் பணிகளும் எளிதாக இருக்கும்' என்றார்.






      Dinamalar
      Follow us