ADDED : ஜன 14, 2025 07:32 AM

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட்பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.பள்ளியில் இண்ட்ர் ஸ்கூல் ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம், மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷனுடன் இணைந்து பண்ருட்டி கிருஷ்ணா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட்பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.பள்ளியில் இண்டர்ஸ்கூல் ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
நகராட்சிசேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக சாத்திப்பட்டு சாலையில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியை பள்ளி தாளாளர் கிருபாகரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏ.பி.கே.டிஜிட்டல் பிரகாஷ், சதிஷ்குமார், காளிதாஸ், மோகன், மணிகண்டன், சேதுராமன், கதிரவன் ராஜ்குமார், கார்த்தி ஆகியோர் செய்தனர்.

