ADDED : ஜன 10, 2024 01:32 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு பள்ளி முதல்வர் புனிதவள்ளி தலைமை தாங்கினார். தாளாளர் செங்கோல் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.
இதில் 'மென்ட்டோரா' நிறுவன தலைவரும். மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியாளருமான டாக்டர் ஆர்த்தி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாணவர்கள் எதிர்கால லட்சியங்கள், இலக்குளில் வெற்றி பெறுவது, உயர் கல்விக்கு வழிகாட்டுவது குறித்து பேசினார். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
