ADDED : ஜன 27, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடத்தில் கோவிலுக்குள் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு வன பகுதியில் விட்டனர்.
பெண்ணாடம் மேற்குரத வீதி, பிள்ளையார் கோவிலில் நேற்று மாலை 4:00 மணியளவில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதையறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். தகவலறிந்து மாலை 4:30 மணியளவில் வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் பாம்பை மீட்டு வனப் பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

