sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு மேம்பால பணி...தீவிரம்; விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மகிழ்ச்சி

/

சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு மேம்பால பணி...தீவிரம்; விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மகிழ்ச்சி

சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு மேம்பால பணி...தீவிரம்; விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மகிழ்ச்சி

சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு மேம்பால பணி...தீவிரம்; விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மகிழ்ச்சி


ADDED : ஏப் 23, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக செம்மண் சாலையை பயன்படுத்தி, அரியலுார், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலுார், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால், ஆண்டுதோறும் பெய்யும் பருவ மற்றும் கோடை மழையின்போது, தொழுதுார் அணைக்கட்டு, சின்னாறு, ஆனைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அப்போது, தற்காலிக செம்மண் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கும்.

இதனால் இருமாவட்ட மக்களும் 15 கி.மீ., சுற்றி வெளியூர் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள், முதியோர்கள், பெண்கள் பாதிப்படைந்தனர்.

இதையடுத்து வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட இரு மாவட்ட கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த 2018ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிதாக மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தின் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் இணைப்புச் சாலை பணிகள் மந்தமாக நடந்தது.

மேம்பாலம் பணியை கண்டித்து, கடந்த மாதம் இரு மாவட்ட அரசியல் பிரமுகர்களும் கிராம மக்கள் உதவியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பேச்சு வார்த்தை வந்த அரியலுார் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்று வரும் மே மாதம் 31க்குள் பாலப்பணியை முடித்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன் காரணமாக சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு மேம்பாலம் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இதனால் இருமாவட்ட மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us